Friday 26 August, 2011

63 நாயன்மார்களின் பெயர்கள்

சமயங்களுள் மிகச் சிறப்பாக போற்றப்படுவது சைவ சமயம் ஆகும். ஆதி காலம் முதல் இன்று வரை அழியாப் புகழ், பெற்று இன்று வரை பல சமயத்தவராலும் , போற்றப்படும் சிறப்பினை உடையது சைவ சமயம் ஆகும் . அத்தகைய சிறப்புடைய சைவ சமயத்தின் புகழை நிலை நாட்டவும், சிவபெருமானுக்குத் தொண்டு செய்வதை மட்டுமே தன் வாழ்வியல் குறிக்கோள் என்று வாழ்ந்து, வந்த பல்வேறு சிவ பக்தர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். 63 நாயன்மார்கள் ஆவார்கள் இவர்களின் முக்கிய குறிக்கோள், சிவபெருமானுக்குத் தொண்டு செய்வதும் , சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதும் ஆகும். இவர்களின் சிவதொண்டை எண்ணிப் பார்த்தால் இன்றும் கூட நம் நெஞ்சம் ஆனது உருகும், இத்தகைய சிறப்பினை உடைய 63 நாயன் மார்களின் பெயர்கள் பற்றி இங்கு காண்போம். 1. சுந்தரர் 2.திருநீலகண்டர் 3.இயற்பகையார் 4.இளையான்குடி மாறனார் 5.மெய்பொருள் நாயனார் 6 .விறன்மீண்டர் 7.அருள் நீதியார் 8.எறிபத்த நாயனார் 9.ஏனாதியார் 10.கண்ணப்பர் 11.குங்கிலயக்கலயர் 12.மானக்கஞ்சாரன் 13.அரிவாட்டாயர் 14.ஆனாயர் 15.முருகன் 16.மூர்த்தி 17.பசும் பதியார் 18.நந்தனார் 19.திருக்குறிப்புத் தொண்டர் 20. சண்டேசுவரர் 21.திருநாவுக்கரசர் 22. குலச்சிறையார் 23.பெருமிழலைக் குறும்பர் 24.காரைக்கால் அம்மையார் 25.அப்பூதியடிகள் 26.திருநீலநக்கனார் 27.நமிநந்தியடிகள் 28.திருஞான சம்பந்தர் 29.கலிக்காமர் 30.திருமூலர் 31.தண்டியடிகள் 32.மூர்க்கனார் 33.சோமாசிமாறன் 34. சாக்கியர் 35.சிராப்புலியார் 36.சிறுத்தொண்டர் 37.சேரமான் பெருமாள் 38.கணநாதனார் 39.கூற்றுவனார் 40.புகழ்ச் சோழன் 41.நரசிங்க முனையரையர் 42.அதி பத்தர் 43.கலிகம்பனார் 44.கலியனார் 45.சத்தி நாயனார் 46.ஐயடிகள் காடவர்கோன் 47.கணம் புல்லனார் 48.காரியார் 49.கூன்பாண்டியன் 50.வாயிலார் 51.முனையடுவார் 52.கழற்சிங்கன் 53.இடங்கலியார் 54.செருத்துணையார் 55.புகழ்த்துணையார் 56.கோட்புலியார் 57.பூசலார் 58.மங்கையர்க்கரசியார் 59.நேசநாயனார் 60.கோச்செங்கணான் 61.நீலகண்ட யாழ்ப்பாணர் 62.சடையனார் 63.இசை ஞானியார் இத்தகைய சிறப்பினை உடைய 63 நாயன் மார்களின் பணிகள் என்றுமே அழியாப் புகழ் பெற்று சிவபெருமானுக்கு புகழ் பெற்றுத் தருபவை ஆகும்.