Thursday 23 December, 2010

இந்த வாரப் புலவர்
ஆறுமுக நாவலர்: யாழ்ப்பாண நல்லூர். சைவ வேளாள மரபினர்" தமிழ்க் கல்லூரி பல நிறுவித் தமிழ் வளர்த்தவர். 27 ஆம் வயதில் திருவாடுதுறை ஆதீனத்தால் "நாவலர்" என்ற பட்டம் வழங்கப் பெற்றவர். "வசன நடை கைவந்த வல்லாளர்" என்று "பரிதிமாற் கலைஞரால்" பாராட்டப்படுபவர். குழந்தை இயேசுவை முதன் முதலில் "கர்த்தர்" என்ற சொல்லால் குறித்தவர் இவரே ஆவார். இயற்றிய படைப்புகள் : சைவ சமய உரை, திருமுருகாற்றுப்படை, திருவிளையாடற்புராண வசனம், பெரியபுராண வசனம், கந்த புராண வசனம், போன்ற பல நூல்கள் ஆகும். தமிழ் வாதம் பல செய்தவர் இதனை "வைதாலும் வழுவின்றி வைவார்" என்று சி.வை.தாமோதரம் பிள்ளை பாராட்டால் அறியலாம்....

Wednesday 8 December, 2010

கவிதை: இல்லம்

அன்று அவர் மகனுக்காக ஆசை ஆசையாய் கட்டியதோ கனவு இல்லம் ! ஆனால் இன்றோ அவர் சோகத்துடன் அமர்ந்திருப்பதோ முதியோர் இல்லம்!