Showing posts with label வாரம் ஒரு தமிழன்பர் : உ வே சாமிநாதையர். Show all posts
Showing posts with label வாரம் ஒரு தமிழன்பர் : உ வே சாமிநாதையர். Show all posts

Sunday, 16 January 2011

இந்த வாரத் தமிழன்பர்:

இந்த வாரத்தமிழன்பர் : உ.வே.சாமி நாதையர் பிறந்த ஆண்டு 1855 ஊர், உத்தமதானபுரம் தந்தை ,வேங்கட சுப்பையர், <தமிழ்த்தாத்தா> என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் உ வே சாமிநாதையர் இவர் காணக் கிடைக்காத அரிய பல தமிழ் நூல்களையும் பல்வேறு நூற்றாண்டிற்கு முற்பட்ட அரிய பல தமிழ் நூல்களை சேகரித்துத் திரட்டி அவற்றினை அச்சிலேற்றி அழியாமல் பாதுகாத்துத் தமிழ் பணி செய்தவர் மேலும் <மகாவித்துவான்> மீனாட்சி சுந்தரத்தின் மனம் கவர்ந்த மாணவர் மாநிலக் கல்லூரிப் பேராசிரயராகப் பணியாற்றிய இவர் என் சரித்திரம் என்னும் தமது வாழ்க்கை வரலாறு கூறும் நூலையும் இயற்றியுள்ளார் பிற நூல்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம், புதியதும் பழையதும் கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி, போன்ற உரைநடை நூல்களை இயற்றியுள்ளார் இவருக்கு ஆங்கில அரசு <மகா மகோபாத்தியாய> என்னும் பட்டம் வழங்கியது இவ்வாறு பல்வேறு தமிழ் தொண்டாற்றிய இவர் 1942 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு நீங்கினார் இருப்பினும் அவர் மறைந்தாலும் அவர் தம் தமிழ் பணிகள் என்றுமே காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை ஆகும்