Sunday 28 November, 2010

பிறந்த நாள் வாழ்த்து-கவி

கண்ணில் காண்பதெல்லாம் நனவென்று நம்பாதே...
காணாத கனவுகளும் நனவாகிப் போகலாம்...
நிகழ்கால நிழலில் மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...
எதிர்கால மர நிழலில், இறந்த காலத் தென்றல் காற்றின் இதமான அரவணைப்பில் சுகமாக ஓய்வெடு...

கண்களை மூடித் திறக்குமுன், உன் கற்பனையைத் திறந்துவிடு..

பூக்களின் வாசனையை நுகர்வது தவறல்ல...அதிலுள்ள முட்களின் வேதனையையும் புரிந்துகொள்..
புன்னகையே வாழ்க்கையல்ல..பூகம்பமும் வரும்; புரிந்துகொள்...

நீ விதைத்ததை நீயே அறுவடை செய்வாய்;
அன்று கொள்ளாவிடினும் நின்றாவது கொள்ளும்..
மாற்றான் துயரம் மற்றுமல்ல; மதுவும்; ஏன் மாதுவும் கூட...

மற்றவன் கண்களில் தெரிவது கண்ணீரென்று மட்டும் எண்ணாதே,
அது விஷமாகவோ; கேலியாகவோ; ஏன் உனக்கெனவே செய்த புதை குளியாகவும் இருக்கலாம்....
இது "நீ"..
உனக்கென ஒரு பாதை..
உனக்கென ஒரு பயணம்..
உன்னோடு சில பயணிகள்..
தேர்வு உன் கையில்...

இது நீ "பிறந்த நாள்" அல்ல..
உன்னை நன்கு ஒரு முறை "உணர்ந்த நாள்" ஆயின்...
உன்னை எண்ணிப் பூரிப்பாதில் நானும் ஒருவன்

பல்லாண்டு காலம் வாழ்க...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment