Wednesday, 5 January 2011
வாரம் ஒரு தமிழன்பர்:
வாரம் ஒரு தமிழன்பர்: தாயுமானவர் : இவரின் கால கட்டம் கி.பி 1706_1744 வரை ஆகும் ஊர் திருமறைக்காடு : பெற்றோர் பெயர்: கேடிலியப்ப பிள்ளை கஜவல்லி அம்மையார் இவர் "திரசிரபுரம் விசயரங்க சொக்க நாதரிடம் கணக்கராய்ப் பணியாற்றினார்" பின் 1736 இல் துறவு பூண்டார் சித்தர் சமரச சன்மார்க்க நெறியினர் மேலும் இவர் தம் பாடல்கள் " தாயுமானவர் சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு " என்பர் இதனைத் " தமிழ் மொழியின் உபநிடதம்" என்பர். இவரைத் "தமிழ்ச்சமயக் கவிதையின் தூண்" என்பர் இவர் பாடல் மூலம் எளிய பாடல் பாட வள்ளலார்க்கும் பாரதிக்கும் வழிகாட்டினார் இவர் பாடல்களில் உவமைகளும் பழமொழிகளும் மிகுந்துள்ளன. இத்தகைய புகழ் பெற்ற தமிழன்பர் இப்பூமியில் வாழ்ந்த ஆண்டுகளோ 48 மட்டுமே ஆனால் செய்த தமிழ் பணியோ என்றுமே காலத்தால் அழியாதவை !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment