Wednesday 9 February, 2011

வாரம் ஒரு தமிழன்பர் :

பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி : " புதினத்தின் புத்துயிர் " என்று போற்றப்படும் இவர் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர் காலம் (1859 1906) வரை ஆகும் பெற்றோர் பெயர்: மகாலிங்க அய்யர், அகிலாண்டேசுவரி அம்மாள், ஆவார். இவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம், ஆகிய மூன்று மொழிகளிலும் நூல் இயற்றியவர் ஆவார். இவர் தம் காவியம் படைத்த நூல்களில் சில 1894 இல் தானவன், 1900 இல் தீனதயாளு, 1903 இல் மதிகெட்ட மனைவி, ஆகிய புதினங்கள் சிறப்புப் பெற்றவையாகும். மேலும் இவை மட்டுமின்றி இரு குழந்தைகள், மாமி கொலுவிருக்கை, தலையணை, மந்திரோபதேசம், ஆகிய நூல்களையும் படைத்துள்ளார் மேலும் இவர் நமது தீன தயாளு தான் தமிழில் முதல் நாவல் என்று கூறிப் பெருமையுற்றார் இதற்குக் காரணம் இவருடைய புதினத்திற்கு முன் தோன்றியவை சரிதம் சரித்திரம் என முடியும் தலைப்புகள் கொண்டவை ஆகையால் தான் அத்தகைய சொற்களைப் பயன்படுத்தாமல் இவ்வாறு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தமையால் இவர் இவ்வாறு பெருமையுற்றார் மேலும் இவர் ஒரு மேற்கோட்பாட்டிற்குப் பின்தான் அத்தியாயம் தொடங்குவார் இருப்பினும் வடசொற்களை மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார். இவரை !மர்மக் கதை முன்னோடி! எனலாம் ரெனால்டு , தாக்கரே, ஆகியோர் புதினங்களின் தாக்கம் இவர் புதினங்களில் அதிகம் காணப்படும் இவ்வாறு 49 ஆண்டுகள் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்தாலும் இவர் தம் இலக்கியப் பணி என்றுமே என்றுமே மக்கள் மனதில் அழியாப் புகழ் என்பதில் ஐயமில்லை! நாமும் அவர் தம் இலக்கியப் பணியைப் போற்றிப் புகழ்வோமாக!

No comments:

Post a Comment