Friday, 26 August 2011

63 நாயன்மார்களின் பெயர்கள்

சமயங்களுள் மிகச் சிறப்பாக போற்றப்படுவது சைவ சமயம் ஆகும். ஆதி காலம் முதல் இன்று வரை அழியாப் புகழ், பெற்று இன்று வரை பல சமயத்தவராலும் , போற்றப்படும் சிறப்பினை உடையது சைவ சமயம் ஆகும் . அத்தகைய சிறப்புடைய சைவ சமயத்தின் புகழை நிலை நாட்டவும், சிவபெருமானுக்குத் தொண்டு செய்வதை மட்டுமே தன் வாழ்வியல் குறிக்கோள் என்று வாழ்ந்து, வந்த பல்வேறு சிவ பக்தர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். 63 நாயன்மார்கள் ஆவார்கள் இவர்களின் முக்கிய குறிக்கோள், சிவபெருமானுக்குத் தொண்டு செய்வதும் , சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதும் ஆகும். இவர்களின் சிவதொண்டை எண்ணிப் பார்த்தால் இன்றும் கூட நம் நெஞ்சம் ஆனது உருகும், இத்தகைய சிறப்பினை உடைய 63 நாயன் மார்களின் பெயர்கள் பற்றி இங்கு காண்போம். 1. சுந்தரர் 2.திருநீலகண்டர் 3.இயற்பகையார் 4.இளையான்குடி மாறனார் 5.மெய்பொருள் நாயனார் 6 .விறன்மீண்டர் 7.அருள் நீதியார் 8.எறிபத்த நாயனார் 9.ஏனாதியார் 10.கண்ணப்பர் 11.குங்கிலயக்கலயர் 12.மானக்கஞ்சாரன் 13.அரிவாட்டாயர் 14.ஆனாயர் 15.முருகன் 16.மூர்த்தி 17.பசும் பதியார் 18.நந்தனார் 19.திருக்குறிப்புத் தொண்டர் 20. சண்டேசுவரர் 21.திருநாவுக்கரசர் 22. குலச்சிறையார் 23.பெருமிழலைக் குறும்பர் 24.காரைக்கால் அம்மையார் 25.அப்பூதியடிகள் 26.திருநீலநக்கனார் 27.நமிநந்தியடிகள் 28.திருஞான சம்பந்தர் 29.கலிக்காமர் 30.திருமூலர் 31.தண்டியடிகள் 32.மூர்க்கனார் 33.சோமாசிமாறன் 34. சாக்கியர் 35.சிராப்புலியார் 36.சிறுத்தொண்டர் 37.சேரமான் பெருமாள் 38.கணநாதனார் 39.கூற்றுவனார் 40.புகழ்ச் சோழன் 41.நரசிங்க முனையரையர் 42.அதி பத்தர் 43.கலிகம்பனார் 44.கலியனார் 45.சத்தி நாயனார் 46.ஐயடிகள் காடவர்கோன் 47.கணம் புல்லனார் 48.காரியார் 49.கூன்பாண்டியன் 50.வாயிலார் 51.முனையடுவார் 52.கழற்சிங்கன் 53.இடங்கலியார் 54.செருத்துணையார் 55.புகழ்த்துணையார் 56.கோட்புலியார் 57.பூசலார் 58.மங்கையர்க்கரசியார் 59.நேசநாயனார் 60.கோச்செங்கணான் 61.நீலகண்ட யாழ்ப்பாணர் 62.சடையனார் 63.இசை ஞானியார் இத்தகைய சிறப்பினை உடைய 63 நாயன் மார்களின் பணிகள் என்றுமே அழியாப் புகழ் பெற்று சிவபெருமானுக்கு புகழ் பெற்றுத் தருபவை ஆகும்.

Friday, 15 July 2011

அன்புள்ள வாசகர்களுக்கு

வணக்கம் எனது வலைப்பூ வருகையாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எனது தளத்தில் இருந்து வெளியிடப்படும் அனைத்து கட்டுரைகள் கவிதைகள் அனைத்தும் என்னுடைய அலைபேசியில் உள்ள இணைய வசதியில் தட்டச்சு செய்யப்பட்டு அதன் மூலம் வெளியிடப்படுபவை உரிய கணிணி வசதி இல்லாத காரணத்தால் அலைபேசியின் வாயிலாக தட்டச்சு செய்வதால் அதுவும் ஐயாயிரம் எழுத்துகளுக்குள் தட்டச்சு செய்வதால் சிறு சிறு பிழை ஏற்படலாம் மேலும் மிக நீண்ட கட்டுரைகளை தட்டச்சு செய்ய இயலவில்லை அப்பிழைகளை வெகு விரைவில் மாற்றிக் கொள்கிறேன் ஆகையால் வாசகர்கள் தற்பொழுது தரும் ஆதரவை என்றும் தரவேண்டும் என்று தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

Monday, 2 May 2011

உலகத் தமிழ் மாநாடு பற்றிய குறுந்தகவல்கள்:

உலகத் தமிழ் மாநாடு என்பது பல்வேறு நாட்டில் உள்ள உலகத் தமிழர்களையும் , அறிஞர்களையும் , ஒன்றினைத்து தமிழ் மொழி வளர்ச்சிக்கான வழிமுறைகள் பற்றியும், தமிழாய்வு பற்றியும் ,விவாதித்தல் கட்டுரைகள், சிறப்பு ஆய்வேடுகள், வெளியிடுதல், ஆகும். இவற்றிற்கு பெரிதும் துணை நின்றவர் (தனிநாயகம் அடிகளார் ) ஆவார் . அவர் இதற்காக 1964 ஆம் ஆண்டு சிறப்பு இதழ் ஒன்றையும் வெளியிட்டார் . பின் முதல் உலகத் தமிழ் மாநாடு : 1966 ஆம் ஆண்டு நடைபெற்றது இம்மாநாடு ஏப்ரல் 17 முதல் 23 வரை நடைபெற்றது இடம் மலாயப் பல்கழைக் கழக வளாகத்தில் நடைபெற்றது . 132 பேரளார்களும் 40 பார்வையாளர்களும் 21 நாட்டின் அறிஞர்களும் கலந்து கொண்டனர் . 146 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன . இம்மாநாட்டிற்கு இராமநாதன் எஸ். அரசரத்தினம் எஸ். சிங்காரவேலு தனிநாயகம் அடிகளார் ஆகியோர் முன்னின்றனர் தமிழகம் முதலமைச்சர் பக்தவச்சலம் இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார் . இரண்டாம் உலகத் தமிழ்நாடு : 1968 ஆம் ஆண்டு சனவரி 3 முதல் 10 வரை நடைபெற்றது. இம்மாநாட்டினை அப்போதைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா முன்னின்று நடத்தினார் . சென்னை மாநாட்டில் 40 நாடுகளிலிருந்து 430 பேர் கலந்து கொண்டனர். மேலும் ஏ.சுப்பையா மாநாட்டின் அமைப்பாளராகவும் வி எஸ் தியாகராசன் . பொதுச்செயலாளராகவும் பணியாற்றினர் . மாநாட்டின் சிறப்பாக கையேடு . நினைவு மலர் கோலாலம்பூர் மாநாட்டுத் தொகுப்பு நூல் சென்னை மாநாட்டில் வெளியிடப்பட்டது. மூன்றாம் உலகத் தமிழ் நாடு : பாரீசில் 1970 ஆம் ஆண்டு சனவரி 15 முதல் 18 வரை நடைபெற்றது. இம்மாநாடு எவ்வித ஆரவாரமும் இல்லாமல் நடைபெற்றது . பேராளர்கள் மற்றும் பார்வையாளர்களுமாக 26 நாடுகளிலிருந்து 180 பேர் பங்கேற்றனர். மாநாட்டில் முதல்வர் மு.கருணாநிதி கே.ஏ.மதியழகன் மற்றும் பேராசிரியர் ஜுன் பிலியோ சயாரிசிலே ஆகியோர் முன்னின்று நடத்தினர் . நான்காம் உலகத் தமிழ் நாடு : முதல் மூன்று மாநாடுகள் ஆராய்ச்சி மன்றத்தின் கொள்கை படியே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்றது. பின் பல்வேறு காரணங்களால் இம்மாநாடு நான்கு ஆண்டிற்கு பிறகு நடைபெற்றது. 1974 சனவரி 3 முதல் 9 வரை யாழ்ப்பாணத்தில நடைபெற்றது. வெளிநாட்டு உதவியே இல்லாமல் நடந்த மாநாடு ஆகும். 106 ஆய்வுக் கட்டுரைகள் இம்மாநாட்டில் வழங்கப் பெற்றன. மேலும் இம்மாநாட்டில் நடைபெற்ற சிறிய கலவரத்தால் 14 தமிழர்கள் கொல்லப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு : 1981 இல் மதுரையில் நவம்பர் 15 முதல் 19 வரை நடைபெற்றது . மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் கருத்தரங்கும் பந்தயத்திடலில் பொதுமக்களுக்கான சொற்பொழிவுகளும், கலைநிகழ்ச்சிகளும், நடைபெற்றன. வெளிநாட்டிலிருந்து 463 அறிஞர்களும் , இந்தியாவிலிருந்து 291 அறிஞர்களும், பேராளர்களாகக் கலந்து கொண்டனர். மாநாட்டில் 232 கட்டுரைகள் படிக்கப்பட்டன. இவை மூவாயிரம் பக்கங்களைக் கொண்டு மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன. மாநாட்டில் கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் திரு.வி கலியாணசுந்தரனார், வீரமாமுனிவர் , தத்துவபோதகர் , உ.வே.சா. கவிமணி, தனிநாயகம் அடிகளார், ச. சோம சுந்தர பாரதி , பாண்டித்துரைத் தேவர், ஆறுமுக நாவலர், ஆகியோருக்கு இம்மாநாடு சார்பாக சிலைகள் நிறுவப்பட்டன. மேலும் மதுரை தமுக்கம் கலையரங்கம் முன்பு நிறுவப்பட்ட தமிழ்த்தாயின் திருவுருவச் சிலையினை அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார் . ஆறாம் உலகத் தமிழ் நாடு : 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 முதல் 19 வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. தலைசிறந்த தமிழறிஞர்களின் 230 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஆர்.ஈ.ஆஷர் மலேசியப் பிரதமர் மஹாதீர் முகம்மது ஆகியோர் இம்மாநாட்டிற்கு முன்னிலை வகித்தனர். ஏழாம் உலகத் தமிழ் மாநாடு : 1989 ஆம் ஆண்டு மொரிசியஸ் நாட்டில் டிசம்பர் 1 முதல் 8 வரை நடைபெற்றது. தமிழ் பண்பாட்டுக் கலைகளான கும்மி கோலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன . பிரெஞ்சு ஆப்பிரிக்கா சீனா இந்தியா நாடு என்று பல்வேறு நாட்டின் தமிழ் அறிஞர்களும் வந்திருந்தனர். மாநாட்டினை மொரீசியஸ் நாட்டு உலகத் தமிழ் ஆராயச்சிக் கழகம் (IATR) அந்நாட்டு அரசின் உதவியினைப் பெற்று மாநாட்டினை நடத்தியது இம்மாநாட்டிற்கு முன்னின்றவர் நாராயண சாமி திருமலை செட்டி ஆவார். எட்டாம் உலகத் தமிழ் மாநாடு : 1995 ஆம் ஆண்டு சனவரி 1 முதல் 5 வரை நடைபெற்றது. அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது . இம்மாநாடு கண்கவர் நிகழ்ச்சிகளுடன் மிகுந்த பொருட் செலவுகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் பண்பாட்டு மலர், அறிவியல் மலர், மாணவர் மலர், என மூன்று மலர்கள் வெளியிடப்பட்டன. கோவை மாநாடு : செம்மொழி என்ற தகுதியைத் தமிழ் மொழி பெற்றதால் ! ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு (உலகத் தமிழ் செம்மொழி மாநாடு) என்று அறிவிக்கப்பட்டு தற்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் கோவையில் ஜீன் 23 முதல் 27 வரை நடைபெற்றது. மாநாட்டில் 49 நாட்டிலிருந்து 1020 பிரதிநிதிகள் 55 தலைப்புகளில் பல்வேறு பொருள்கள் குறித்து ஆய்வுக் கட்டுரை அளித்தனர், இவ்வாறு பல்வேறு காலங்களில் தமிழ் மொழிக்கும், அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், சிறப்பு செய்யும் விதமாகவும் தமிழ் மொழியின் பெருமையை உலக அரங்கில் பறை சாற்றும் வண்ணமும் தமிழின் பெருமையை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இம்மாநாடு நடைபெற்றது என்பதில் ஐயமில்லை !

Saturday, 30 April 2011

பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய குறிப்புகள்

பாவேந்தர் பாரதிதாசன் : பிறந்த தேதி , 29.4.1891 பிறந்த ஊர், புதுச்சேரி தந்தையார் பெயர் : கனக சபை முதலியார் இவர் முது பெரும்புலவர் பு. அ. பெரிய சாமியிடம் தமிழ்ப் பயின்றார்., பின் புதுவை அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார் , இவர் தம் இயற்பெயர் சுப்புரத்தினம் , இவர் பின்பு ஒரு நாள் வேலுநாயகர் வீட்டுத் திருமணத்தில் பாரதியைச் சந்தித்தார் , மேலும் இவர் தம் பாடலான (எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா) என்ற பாடலைக் கேட்டு மகிழ்ந்த பாரதியார் அக்கவிதையைத் தாமே ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின், கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது, எனச் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பினார் , மேலும் பாரதி மேலுள்ள ஈடுபாட்டால் தம் பெயரைப் <பாரதிதாசன்> என மாற்றிக் கொண்டார், தொடக்கத்தில் முருக வழிபாடு கொண்டிருந்த பாரதிதாசன் பின் சீர்திருத்தவாதியாய்ப், பகுத்திறிவாதியாய் , மாறினார் , பின் அவர்தம் பாடல்களில் சீர்திருத்த வேட்கையும், தமிழுணர்வும் , பரவலாகக் காணப்படும். <நாடும் மொழியும் நமதிரு கண்கள்> என்பது போல் நாட்டுப்பற்று மிக்குடைய <பாரதியையும் பாரதிதாசனையும் இக்காலத் தமிழின் இருகண்கள்> எனலாம் இவர் இயற்றியவை : பாண்டியன் பரிசு, எதிர் பாராத முத்தம், சேரதாண்டவம் , அழகின் சிரிப்பு , குடும்ப விளக்கு , குறிஞ்சித் திட்டு , கண்ணகி புரட்சிக் ,காப்பியம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், மணிமேகலை வெண்பா, காதல் நினைவுகள் , கழைக் கூத்தியின் காதல் , இளைஞர் இலக்கியம், செளமியன், இசையமுது இரண்டு தொகுதிகள் , நல்ல தீர்ப்பு , தமிழியக்கம், இருண்ட வீடு , திருக்குறள் உரை, என காலத்தால் அழியாத பேரிலக்கியம் படைத்த சகாப்தம் ஆவார் . இவர் தம் பாடல் வகை : அகவல் எண்சீர் , விருத்தம், அறுசீர் விருத்தம் , சிந்து , கலிவெண்பா, நொண்டிச் சிந்து , முதலியவை ஆகும் . இவர் தம் பாடுபொருள்: தமிழ்மொழி , இயற்கை, சீர்திருத்தம் , இல்லறமாண்பு, பொதுவுடைமை, சமத்துவம் , முதலியன ஆகும் . சிறந்த வரிகளில் சில: (தமிழுக்கும் அமுதென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்) தமிழ்பற்று பற்றியது (கூடத்திலே மனப்பாடத்திலே விழி கூடிக்கிடக்கும் ஆணழகை ஒடைக் குளிர்மலர்ப் பார்வையினால் அவள் உண்ணத் தலைப்படும் வேளையிலே ) (ஆடை திருத்தி நின்றாளவள் இவன் ஆயிரம் ஏடு திருப்புகின்றான்) பெண் எழுச்சி பற்றியது (பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டின் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே) என்று எழுச்சி மிக்க பாடல் வரிகளை இயற்றியும் தமிழ் பணி செய்து வாழ்ந்து வந்த இலக்கியத் திலகம் , தமிழ்ச் சுடர் விளக்கு, 21.4.1964 இல் அனைந்தது , இன்று இந்த தமிழ்ச்சுடர் நம்முடன் இல்லாவிட்டாலும் அவர் தம் தமிழ்ப்பணி மற்றும் உணர்ச்சி மிக்க பாடல் வரிகள் என்றும் அழிக்க முடியாதவை , இத்தகைய சிறப்புடைய பாவேந்தரை என்றும் மறவாமல் போற்றுவோமாக !

Tuesday, 1 March 2011

சிறந்த தமிழ் கவிதைகள்











முன்னோர்களின் நம்பிக்கைகள்

வணக்கம் நண்பர்களே : நம்பிக்கை என்பது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட ஒரு விருப்பம் ஆகும் அவை ஒவ்வொரு செயலிலும் அமையும் காரணம் அவர்கள் எண்ணிய செயல்கள் வெற்றி தோல்வி போன்றவற்றின் அடிப்படையில் அமைவதால் அவர்கள் நம் முன்னோர்கள் கூறிச் சென்ற சில நம்பிக்கை முறைகளைப் பின்பற்றி வருவதே காரணம் எனலாம். அவை அவர்களின் அன்றாட செயல் நல்லகாரியம் பொருளாதாரம் போன்றவற்றின் அடிப்படையில் கூட அமையலாம். அவ்வாறு அவர்கள் பின்பற்றும் சில நம்பிக்கை முறைகளில் சிலவற்றைக் காண்போம் : திருமணம் பற்றிய நம்பிக்கைகள்: திருமணத்திற்குப் பின் மணப்பெண்ணை வெள்ளியன்று கணவன் வீட்டிற்கு அனுப்பக்கூடாது, திருமணம் பற்றிய கனவு நல்லதன்று, ஆடி மாதத்தில் பெண் பார்த்தல் நல்லதல்ல, திருமணமான மணமக்களை மஞ்சள் கலந்த அரிசியால் வாழ்த்த வேண்டும். புதுமணத் தம்பதிகள் புதுவீட்டில் குடியேறக் கூடாது, இவை திருமணம் பற்றிய நம்பிக்கைகள் வேளாண்மை பற்றிய நம்பிக்கைகள்: வியாழன் நாற்று நடுவதும் வெள்ளியன்று அறுப்பதும் நல்லது, திங்கள் வெள்ளி நெல் அவிக்கக் கூடாது , சந்திரனில் பிறை வடகோடு உயர்ந்திருந்தால் வரப்பெல்லாம் நெல் என நம்புகின்றனர், மழை பற்றிய நம்பிக்கைகள் : வடக்கே தெற்கே மின்னல் தோன்றினால் மழை வரும் என்பர், ஆடு கூடிகூடி அலைந்தால் மழை வரும், கறுப்பு முட்டைத் தூக்கிச் சென்றால் மழை வரும், தவளை கத்தினால் நரு ஊருக்குள் வந்தால் மழை வரும், விலங்கு பறவை பற்றிய நம்பிக்கைகள்: கருடன் வட்டமிடல் நல்லது இரண்டு ஆந்தைகளை ஒன்றாகக் காண்பது நல்லது, எருமை மாடு சனிக்கிழமை கன்று ஈனக்கூடாது, எண் பற்றிய நம்பிக்கைகள்: மூன்று நல்ல எண்ணாகக் கருதப்படு கின்றது, ஒற்றை எண்கள் நன்மை பயக்கும், நான்காவது பெண் நடைகல்லைப் பெயர்க்கும், ஆறாவது ஆண்மகன் ஆனைகட்டி வாழ்வான், ஆறாவது பெண் பிறந்தால் குடும்பம் சீரழியும், கிழமை பற்றிய நம்பிக்கைகள்: செவ்வாய் முடிவெட்டல் வறுமை தரும், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது, புதன்கிழமை பணம் கிடைப்பது நல்லது, செவ்வாய் வெறுவாய், வெள்ளி ஆண் பிறந்தால் கொள்ளிக்கு ஆகாது, இவ்வாறு பல்வேறு வகையான நம்பிக்கைகளை நம் முன்னோர் கூறியுள்ளனர் இவை சிலருக்குப் பொருந்தியும் வரலாம் இவ்வாறு வருபவேயே உண்மை என்று சிலர் நம்புவர் நம்பாமலும் போகலாம்.

Sunday, 27 February 2011

வாரம் ஒரு தமிழன்பர் : மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சிறப்புகள் :காலம் (1826 1889) தமிழ் நாவலின் 'தந்தை' என அழைக்கப்படுபவர் மேலும் இவர் புதினத்தின் முன்னோடியாகவும் உரைநடையின் தொடக்க முயற்சியாளராகவும் விளங்கியவர். ஆவார் தமிழில் தோன்றிய முதற்புதினமான பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி கதை, ஆகிய சிறப்புமிக்க இரண்டு புதினங்களை இயற்றி வெற்றியும் கண்டவர் இவரே ஆவார். இவற்றில் பிரதாப முதலியார் சரித்திரம் நீதிக்கருத்துக்களும் , நகைச்சுவைப் பகுதியும் நிறைந்தவை ஆகும் . மேலும் தானே கதை சொல்லும் பாணியில் அமைந்தவை , மேலும் சுகுண சுந்தரி என்ற புதினம் 'கற்பனை வளம்' நிறைந்தவை ஆகும். மேலும் இவர் பல்வேறு வகையான இலக்கியப் புதினம் நாவல் போன்றவற்றினை இயற்றி நாவல் உலகின் தந்தையாகத் திகழ்கின்றார் அவர் தம் பணியை நாமும் போற்றிப் புகழ்வோமாக!

Friday, 18 February 2011

உலகின் புனைப் பெயர்கள் :

உலகின் புனைப் பெயர்கள் : இவ்வுலகில் பல்வேறு வகையான நாடுகள் தத்தமக்கே உரிய பெயர்களைக் கொண்டிருந்தாலும் அந்நாட்டின் சில சிறப்பம்சம் கருதி அவைகள் சில புனைப் பெயர்களால் குறிப்பிடப் படுகின்றன அவைகள் பற்றி இனிக் காண்போம் உலகின் கூரை : பாமீர் பீடபூமி, உலகின் சர்க்கரைக் கிண்ணம் : கீயூபா, இருண்ட கண்டம் : ஆப்பிரிக்கா , ஐரோப்பாவின் தானியக் களஞ்சியம்: ஹங்கேரி நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு : நார்வே, சூரியன் மறையா நாடு: பிரிட்டன், புனித பூமி: பாலஸ்தீனம்' ஆயிரம் ஏரிகளின் நாடு : பின்லாந்து , நைல் நதியின் நன்கொடை : எகிப்து, முடிவில்லா நகரம்: ரோம், வெள்ளை யானை நாடு : தாய்லாந்து, சீனாவின் துயரம்: ஹவாங்கோ நதி' (மஞ்சள் நதி) உலகின் தனிமைத் தீவு: டிரிஸ்டன். தங்கக் கம்பளி பூமி: ஆஸ்திரேலியா' பொன் வாயில் நகரம்: சான் பிரான்ஸிஸ் கோ, கனவுக் கோபுரங்களின் நகரம்: ஆக்ஸ்போர்டு, கருங்கல் நகரம்: அபர்டின் ஸ்காட்லாந்து, வெள்ளை நகரம்: பெல்கிரேடு, இவ்வாறு சிற்சில சிறப்புகள் கொண்டு இந்நாடுகள் புனைப் பெயருடன் வழங்கப் படுவதைக் காணலாம்

Wednesday, 9 February 2011

வாரம் ஒரு தமிழன்பர் :

பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி : " புதினத்தின் புத்துயிர் " என்று போற்றப்படும் இவர் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர் காலம் (1859 1906) வரை ஆகும் பெற்றோர் பெயர்: மகாலிங்க அய்யர், அகிலாண்டேசுவரி அம்மாள், ஆவார். இவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம், ஆகிய மூன்று மொழிகளிலும் நூல் இயற்றியவர் ஆவார். இவர் தம் காவியம் படைத்த நூல்களில் சில 1894 இல் தானவன், 1900 இல் தீனதயாளு, 1903 இல் மதிகெட்ட மனைவி, ஆகிய புதினங்கள் சிறப்புப் பெற்றவையாகும். மேலும் இவை மட்டுமின்றி இரு குழந்தைகள், மாமி கொலுவிருக்கை, தலையணை, மந்திரோபதேசம், ஆகிய நூல்களையும் படைத்துள்ளார் மேலும் இவர் நமது தீன தயாளு தான் தமிழில் முதல் நாவல் என்று கூறிப் பெருமையுற்றார் இதற்குக் காரணம் இவருடைய புதினத்திற்கு முன் தோன்றியவை சரிதம் சரித்திரம் என முடியும் தலைப்புகள் கொண்டவை ஆகையால் தான் அத்தகைய சொற்களைப் பயன்படுத்தாமல் இவ்வாறு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தமையால் இவர் இவ்வாறு பெருமையுற்றார் மேலும் இவர் ஒரு மேற்கோட்பாட்டிற்குப் பின்தான் அத்தியாயம் தொடங்குவார் இருப்பினும் வடசொற்களை மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார். இவரை !மர்மக் கதை முன்னோடி! எனலாம் ரெனால்டு , தாக்கரே, ஆகியோர் புதினங்களின் தாக்கம் இவர் புதினங்களில் அதிகம் காணப்படும் இவ்வாறு 49 ஆண்டுகள் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்தாலும் இவர் தம் இலக்கியப் பணி என்றுமே என்றுமே மக்கள் மனதில் அழியாப் புகழ் என்பதில் ஐயமில்லை! நாமும் அவர் தம் இலக்கியப் பணியைப் போற்றிப் புகழ்வோமாக!

Tuesday, 8 February 2011

கவிதை : மழைத்துளி

கவிதை : 'மழைத்துளி' மேகத்தின் காதலை பூமிக்கு சொல்ல தூதாய் வந்த மழைத்துளியே நான் காதலில் தோற்று கண்ணீருடன் நின்ற பொழுது என் மீது பெய்து என் துயர் துடைத்தாய் நீ மழைத்துளி அல்ல என் மனதில் விழுந்த உயிர்த்துளி !

Saturday, 22 January 2011

99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்

1. காந்தள் மலர்

2. ஆம்பல் மலர்

3. அனிச்சம் பூ

4. குவளை மலர்

5. குறிஞ்சிப் பூ

6. வெட்சிப் பூ

7. செங்கோடுவேரி மலர்

8. தேமாம் பூ

9. மணிச்சிகை(செம்மணிப்பூ)

10. உந்தூழ்(மூங்கில் பூ)

11. கூவிளம் பூ

12. எறுழம்பூ

13. சுள்ளி(மராமரப்பூ)

14. கூவிரம் பூ

15. வடவனம் பூ

16. வாகைப் பூ

17. குடசம்(வெட்பாலை)

18. எருவை(கோரைப்பூ)

19. செருவிளை(வெண்காக்கணம்)

20. கருவிளம் பூ

21. பயினிப் பூ

22. வானிப் பூ

23. குரவம் பூ

24. பசும்பிடி(பச்சிலைப்பூ)

25. வகுளம்(மகிழம்பூ)

26. காயா மலர்

27. ஆவிரைப் பூ

28. வேரல்(சிறுமூங்கில்பூ)

29. சூரல் மலர்

30. சிறுபூளைப் பூ

31. குறுநறுங்கண்ணி மலர்

32. குருகிலை(முருக்கிலை)

33. மருதம் பூ

34. கோங்கம் பூ

35. போங்கம் பூ

36. திலகம் பூ

37. பாதிரி மலர்

38. செருந்தி மலர்

39. அதிரல் பூ

40. சண்பகம் மலர்

41. கரந்தை மலர்

42. குளவி(காட்டு மல்லி)

43. மாம்பூ

44. தில்லைப்பூ

45. பாலைப்பூ

46. முல்லைப்பூ

47. கஞ்சங்குல்லை

48. பிடவம் பூ

49. செங்கருங்காலி மலர்

50. வாழைப் பூ

51. வள்ளிப் பூ

52. நெய்தல் மலர்

53. தாழைப் பூ

54. தளவம்(செம்முல்லைப் பூ)

55. தாமரை மலர்

56. ஞாழல் மலர்

57. மௌவல் பூ

58. கொகுடிப் பூ

59. சேடல்(பவளமல்லி பூ)

60. செம்மல்(சாதிப் பூ)

61. சிறுகெங்குரலி(கருந்தாமரைக் கொடிப்பூ)

62. கோடல்(வெண்காந்தள் மலர்)

63. கைதை(தாழம் பூ)

64. வழைப் பூ(சுரபுன்னை)

65. காஞ்சிப் பூ

66. கருங்குவளைப் பூ(மணிக்குலை)

67. பாங்கர் பூ

68. மரவம் பூ

69. தணக்கம் பூ

70. ஈங்கைப் பூ

71. இலவம் பூ

72. கொன்றைப் பூ

73. அடுப்பம் பூ

74. ஆத்திப் பூ

75. அவரைப் பூ

76. பகன்றைப் பூ

77. பலாசம் பூ

78. பிண்டி(அசோகம்பூ)

79. வஞ்சிப் பூ

80. பித்திகம்(பிச்சிப் பூ)

81. சிந்துவாரம்(கருநொச்சிப்பூ)

82. தும்பைப் பூ

83. துழாய்ப் பூ

84. தோன்றிப் பூ

85. நந்திப் பூ

86. நறவம்(நறைக் கொடிப்பூ)

87. புன்னாகம் பூ

88. பாரம்(பருத்திப்பூ)

89. பீரம்(பீர்கம்பூ)

90. குருக்கத்திப் பூ

91. ஆரம்(சந்தனப்பூ)

92. காழ்வைப் பூ

93. புன்னைப் பூ

94. நரந்தம்(நாரத்தம்பூ)

95. நாகப்பூ

96. நள்ளிருநாறி(இருள்வாசிப்பூ)

97. குருந்தம் பூ

98. வேங்கைப் பூ

99. புழகுப் பூ

Sunday, 16 January 2011

இந்த வாரத் தமிழன்பர்:

இந்த வாரத்தமிழன்பர் : உ.வே.சாமி நாதையர் பிறந்த ஆண்டு 1855 ஊர், உத்தமதானபுரம் தந்தை ,வேங்கட சுப்பையர், <தமிழ்த்தாத்தா> என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் உ வே சாமிநாதையர் இவர் காணக் கிடைக்காத அரிய பல தமிழ் நூல்களையும் பல்வேறு நூற்றாண்டிற்கு முற்பட்ட அரிய பல தமிழ் நூல்களை சேகரித்துத் திரட்டி அவற்றினை அச்சிலேற்றி அழியாமல் பாதுகாத்துத் தமிழ் பணி செய்தவர் மேலும் <மகாவித்துவான்> மீனாட்சி சுந்தரத்தின் மனம் கவர்ந்த மாணவர் மாநிலக் கல்லூரிப் பேராசிரயராகப் பணியாற்றிய இவர் என் சரித்திரம் என்னும் தமது வாழ்க்கை வரலாறு கூறும் நூலையும் இயற்றியுள்ளார் பிற நூல்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம், புதியதும் பழையதும் கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி, போன்ற உரைநடை நூல்களை இயற்றியுள்ளார் இவருக்கு ஆங்கில அரசு <மகா மகோபாத்தியாய> என்னும் பட்டம் வழங்கியது இவ்வாறு பல்வேறு தமிழ் தொண்டாற்றிய இவர் 1942 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு நீங்கினார் இருப்பினும் அவர் மறைந்தாலும் அவர் தம் தமிழ் பணிகள் என்றுமே காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை ஆகும்

Friday, 7 January 2011

கனவுகளும் அவற்றிற்கான நம்பிக்கைகளும்

இம்மானிட உலகில் உறக்கம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றே ஆனால் அவ்வுறக்கம் வரும் பொழுது மனிதன் உறக்கத்தில் சில நிகழ்வுகளைப் பற்றி அவர் தம் மனக்கண் முன்னே காண முடிகின்றது அவையே கனவு அவை நல்லவை, தீயவை, என்ற வகையில் அமைகின்றன இருப்பினும் அத்தகைய உளவியல் கூறுகளை ஒரு சிலர் ஏற்கின்றனர் மற்றொரு சாரார் ஏற்க மறுக்கின்றனர் காரணம் அக்கனவு ஒரு சிலர் வாழ்வில் அவர்கள் கண்டது போல் பலிக்கின்றன, சிலருக்கு பலிக்காமலும் போகின்றன இருப்பினும் சிலர் கனவுகள் காண்பதே தவறு என்றும் குறிப்பிடுகின்றனர் இத்தகைய வாதங்களுக்கு நடுவில் நம் முன்னோர்கள் பலர் கனவுகளும் அவற்றிற்கு ஏற்ற சில நம்பிக்கை முறைகளையும் கூறி வருகின்றனர் அவை பின்வருமாறு : 1 அதிகாலை கனவு பலிக்குமென நம்புகின்றனர். 2.கனவில் சாவைக் காண்பது நல்லது என்பர். 3.கனவில் திருமணத்தைக் காண்பது நல்லதல்ல என்பர். 4.கனவில் மலத்தைத் தொட்டதாகக் கண்டால் செல்வம் அதிகரிக்கும் 5.கனவில் ஆகாய விமானத்தைக் கண்டால் தமக்கு நேரவிருக்கும் ஆபத்தைக் குறிக்கும். 6.கனவில் இரும்பைக் கண்டால் துன்பம் பல நேரும். 7.வெள்ளி உலோகத்தைக் கனவில் கண்டால் வாழ்க்கையில் வெற்றியும் பரத்தையர் உறவும் ஏற்படும். 8.கனவில் ஆப்பிள் பழங்களைக் கண்டால் அதிர்ஷ்டம் ஆகும். 9.உப்பைக் கண்டாலும் அதிரஷ்டம் ஆகும், மேலும் ஆமையைக் காண்பதும் அதிர்ஷ்டம் ஆகும் . 10.கனவில் பன்றி, பூ, பெண்கள், ஆடு, பச்சைமரம், விறகு, முதிலியவற்றைக் காண்பது நல்லதல்ல. 11.கனவில் எழுதிக் கொண்டிருப்பதாகக் கண்டால் நல்ல செய்திகள் வரும், மேலும் கனவில் சந்திரனைக் கண்டால் காதலில் வெற்றி ஏற்படும். 12.கனவில் ஏர் உழுவதாகக் கண்டால் எடுத்த காரியம் தாமதமாக வெற்றியடையும். 13.வானத்தில் கழுகு வட்டமிடுவதாகக் கனவு கண்டால் தீமை வரும், மேலும் காகத்தைக் கனவில் கண்டால் மரணச் செய்தி வரும். 14.கிணற்றில் நீந்துவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியம் வெற்றி பெறும். 15.கனவில் தாமே இறப்பதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும், மேலும் சிறைச் சாலையில் இருப்பதாகக் கனவு கண்டால் பேரும் புகழும் உண்டாகும். 16.பொற்சங்கிலி அணிவதுபோலக் கனவு கண்டால் நல்ல அறிகுறியாகும், மேலும் மணியோசைக் கேட்பதாகக் கனவு கண்டால் திருமணம் நடைபெறும். 17.சீட்டு ஆடுவதாகக் கனவில் கண்டால் மனக்கவலை ஏற்படும், மேலும் மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன் உறவு வைப்பதாகக் கனவு கண்டால் ஆபத்து ஏற்படும். 18.சூரிய கிரகணம் பிடித்திருப்பது போல் கனவு கண்டால் தீமை ஏற்படும், ஆனால் சூரியன் உதயமாவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியம் வெற்றி பெறும். 19.தேர்வு எழுதுவதாகக் கனவு கண்டால் வேலைவாய்ப்பில் உயர்வு ஏற்படும்... இவ்வாறு மனிதர்களின் கனவுகளுக்கு ஏற்ற நம்பிக்கை முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி வருகின்றனர் இவை வாழ்வியலுடன் ஒப்பிடும் பொழுது சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருக்கன்றது....

Wednesday, 5 January 2011

வாரம் ஒரு தமிழன்பர்:

வாரம் ஒரு தமிழன்பர்: தாயுமானவர் : இவரின் கால கட்டம் கி.பி 1706_1744 வரை ஆகும் ஊர் திருமறைக்காடு : பெற்றோர் பெயர்: கேடிலியப்ப பிள்ளை கஜவல்லி அம்மையார் இவர் "திரசிரபுரம் விசயரங்க சொக்க நாதரிடம் கணக்கராய்ப் பணியாற்றினார்" பின் 1736 இல் துறவு பூண்டார் சித்தர் சமரச சன்மார்க்க நெறியினர் மேலும் இவர் தம் பாடல்கள் " தாயுமானவர் சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு " என்பர் இதனைத் " தமிழ் மொழியின் உபநிடதம்" என்பர். இவரைத் "தமிழ்ச்சமயக் கவிதையின் தூண்" என்பர் இவர் பாடல் மூலம் எளிய பாடல் பாட வள்ளலார்க்கும் பாரதிக்கும் வழிகாட்டினார் இவர் பாடல்களில் உவமைகளும் பழமொழிகளும் மிகுந்துள்ளன. இத்தகைய புகழ் பெற்ற தமிழன்பர் இப்பூமியில் வாழ்ந்த ஆண்டுகளோ 48 மட்டுமே ஆனால் செய்த தமிழ் பணியோ என்றுமே காலத்தால் அழியாதவை !

Thursday, 23 December 2010

இந்த வாரப் புலவர்
ஆறுமுக நாவலர்: யாழ்ப்பாண நல்லூர். சைவ வேளாள மரபினர்" தமிழ்க் கல்லூரி பல நிறுவித் தமிழ் வளர்த்தவர். 27 ஆம் வயதில் திருவாடுதுறை ஆதீனத்தால் "நாவலர்" என்ற பட்டம் வழங்கப் பெற்றவர். "வசன நடை கைவந்த வல்லாளர்" என்று "பரிதிமாற் கலைஞரால்" பாராட்டப்படுபவர். குழந்தை இயேசுவை முதன் முதலில் "கர்த்தர்" என்ற சொல்லால் குறித்தவர் இவரே ஆவார். இயற்றிய படைப்புகள் : சைவ சமய உரை, திருமுருகாற்றுப்படை, திருவிளையாடற்புராண வசனம், பெரியபுராண வசனம், கந்த புராண வசனம், போன்ற பல நூல்கள் ஆகும். தமிழ் வாதம் பல செய்தவர் இதனை "வைதாலும் வழுவின்றி வைவார்" என்று சி.வை.தாமோதரம் பிள்ளை பாராட்டால் அறியலாம்....

Wednesday, 8 December 2010

கவிதை: இல்லம்

அன்று அவர் மகனுக்காக ஆசை ஆசையாய் கட்டியதோ கனவு இல்லம் ! ஆனால் இன்றோ அவர் சோகத்துடன் அமர்ந்திருப்பதோ முதியோர் இல்லம்!

Sunday, 28 November 2010

பருவத்தைக் கொண்டாடு !

இது
மரங்கள் உடைகளின்
நிறம்
மாற்றும் காலம்.
அவசர அவசரமாய்
உடை மாற்றும் காலம்.
பச்சைய நரம்புகளுக்குள்
வர்ணப் பாம்புகள்
நெளிய,
இலைகள் எல்லாம்
வானவில் போர்த்திச் சிரிக்கும்
வர்ணங்களின் மாதம்.
காற்றில் சூரியனின்
வெப்பம் நகர
ஓராயிரம் குளிர்வேகத் தடைகள்
உருவாகும்.
குளிரில் நடுங்கிக் கொண்டே,
வெப்பம் இழந்த வெயிலை
இழுத்துக் கொண்டே,
முகிலிடை ஓடுவான் ஆதவன்.
இலைகளுக்கு இது
குளிர் முத்தக் காலம்.
வெயில் காலம்
மரங்களுக்குச் சீருடை அணிவிக்கிறது,
இப்போது
மரங்கள் திருவிழா
கொண்டாடுகின்றன.
பிரகாசமாய் எரியும்
கடைசித்துளி மெழுகு தான் இது,
இன்னும் சில நாட்கள் தான்,
இலைகள்,
உறவுகளுக்கு விடைகொடுத்து
மர(ண)த்தின் காலடியில்
மண்டியிடும்.
இன்னும் சில நாட்கள் தான்,
இந்தக் குளிரும்
உறைந்து போய்,
மேகத்தை உருக விடாமல் உடைக்கும்.
உடைந்து வீழும்
மேகத் துண்டுகள்,
ஆடைகளைந்த
மரமேனியில் ஆனந்தமாய் கூடுகட்டும்,
வெப்பத்தின் கடைசித் துளிகள்
மரத்தின் மையத்திற்குள் ஓடி
மறைந்து கொள்ள,
பனிவீரர்கள் மட்டும்
ஆட்சியைப் பிடித்து விட்டதாய்
ஊரெங்கும் அறிவிப்பார்கள்.
வெப்பக் குளம் தேடி
தெப்பக் குளம் விட்டு
தவளை மனிதர்கள் தாவுவார்கள்.
தன்னை
அவரசமாய் மிதிக்கும் வாகனங்களைப்
புரட்டி,
தெரியாமல் தீண்டும்
வெற்றுக் கால்களை
விரட்டி,
எங்கும் சில மாதங்கள்
பகிரங்கத் தாக்குதல் நடக்கும்.
அதுவும் சில காலம் தான்,
பதுங்கிய சூரியப் புலி,
மீண்டும் தன்
குகைவிட்டுச் சீறும்
கதிர்களில் வெப்ப வரம்புகள் மீறும்.
அது
குளிர் யானைகளிள்
அகன்ற பாதங்களைக் கீறும்.
மெல்ல மெல்ல,
பனி வீரர் படை பின்வாங்கும்,
மீண்டும் வருவேன் என்னும்
சபதத் துளிகளை
நிற்குமிடத்தில் நிறுத்திவிட்டு.
கிளைகளில் இருக்கும்
பனிக் கூடுகளை
வெப்ப அரிவாள் அறுத்தெறியும்.
சாலைகளை அது
பனியின் கண்ணீர் மொண்டு
கழுவித் துடைக்கும்.
மரங்கள் எல்லாம்,
மீண்டும்
சூரியக் கட்டளைப்படி
சீருடை அணியத் தயாராகும்.
ஆதவன் வந்து
சிம்மாசனத்தில் அமருவான்.
எதுவும் நிரந்தரமாய்
வந்தமராது,
ஆனாலும்
மாற்றங்களை ஏற்கும் வரம் தரப்படும்,
மரங்களுக்கும்
மனிதர்களுக்கும்.

பிறந்த நாள் வாழ்த்து-கவி

கண்ணில் காண்பதெல்லாம் நனவென்று நம்பாதே...
காணாத கனவுகளும் நனவாகிப் போகலாம்...
நிகழ்கால நிழலில் மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...
எதிர்கால மர நிழலில், இறந்த காலத் தென்றல் காற்றின் இதமான அரவணைப்பில் சுகமாக ஓய்வெடு...

கண்களை மூடித் திறக்குமுன், உன் கற்பனையைத் திறந்துவிடு..

பூக்களின் வாசனையை நுகர்வது தவறல்ல...அதிலுள்ள முட்களின் வேதனையையும் புரிந்துகொள்..
புன்னகையே வாழ்க்கையல்ல..பூகம்பமும் வரும்; புரிந்துகொள்...

நீ விதைத்ததை நீயே அறுவடை செய்வாய்;
அன்று கொள்ளாவிடினும் நின்றாவது கொள்ளும்..
மாற்றான் துயரம் மற்றுமல்ல; மதுவும்; ஏன் மாதுவும் கூட...

மற்றவன் கண்களில் தெரிவது கண்ணீரென்று மட்டும் எண்ணாதே,
அது விஷமாகவோ; கேலியாகவோ; ஏன் உனக்கெனவே செய்த புதை குளியாகவும் இருக்கலாம்....
இது "நீ"..
உனக்கென ஒரு பாதை..
உனக்கென ஒரு பயணம்..
உன்னோடு சில பயணிகள்..
தேர்வு உன் கையில்...

இது நீ "பிறந்த நாள்" அல்ல..
உன்னை நன்கு ஒரு முறை "உணர்ந்த நாள்" ஆயின்...
உன்னை எண்ணிப் பூரிப்பாதில் நானும் ஒருவன்

பல்லாண்டு காலம் வாழ்க...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Friday, 26 November 2010

வாரணமாயிரம் ---- ஆண்டாள்

கலி விருத்தம்:

நாச்சியார் திருமொழியின் இந்த ஆறாம் பதிகம் மிகவும் புகழ் பெற்ற ஒன்று. வாரணமாயிரம் என்று தொடங்கும் இந்தப் பதிகத்தில், கனவிலே கண்ணபிரானை மணந்துகொண்ட அனுபவத்தை தோழிக்குச் சொல்கிறாள் ஆண்டாள்.

ஐந்தாம் திருமொழியில், கண்ணனை வரச் சொல்லிக் கூவுமாறு குயிலைக் கேட்டுக்கொண்டாள் ஆண்டாள். குயிலும் கூவியது. ஆயினும் கண்ணன் வரவில்லை. எனவே வருத்தம் மிகக் கொண்டாள் கோதை. அதனால் இவளை உயிர் தரித்திருக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணிய கண்ணன், இவள் விரும்பியபடியே எந்தக் குறையும் இல்லாதபடி கனவிலே வந்து பாணிக்கிரகணம் வரை செய்துகொண்டான்.

வாரணம் ஆயிரம் என்று தொடங்கும் திருக்கல்யாண வைபவம்தான் இந்தப் பதிகத்தில் ஆண்டாள் நாச்சியாரால் பாடப்படுகிறது. வாரணமாயிரம் என்றால் ஆயிரம் யானைகள். கண்ணனுக்கு எப்படி ஆயிரம் யானைகள் என்பது பொருத்தமாக இருக்கும்? கண்ணனிடம் மாடுகள்தானே இருக்கும்? அவன் பிறந்தது க்ஷத்ரிய குலம் என்றாலும், வளர்ந்தது வைசிய குலத்தில்தானே! அவ்வகையில் கண்ணன் பிறந்த குலத்தில் இருந்து அவருக்கு ஆயிரம் யானைகள். வளர்ந்த குலத்தில் இருந்து கறவை இனங்கள். அப்படி இருந்தாலும், எதற்காக ஆயிரம் யானைகள் உடன் வரவேண்டும்?

வருபவன் கண்ணன் ஒருவனாக இருந்தாலும், அவனுடைய தோழர்கள்

ஆயிரம் பேர் உடன் வருகிறார்கள். ஒவ்வொருவரையும் ஒரு யானை மேல் ஏற்றி அழைத்து வருகிறார் கண்ணபிரான். பொதுவாக கல்யாண மாப்பிள்ளை மட்டும்தானே சிறப்பு வாகனத்தில் வருவார்..! ஆனால், இங்கே கண்ணனின் தோழர்களும் சிறப்பு வாகனத்தில் சமமாக வருகிறார்கள். காரணம் - பகவானுக்கு இருக்கிற குணம்..! அவனிடம் சரணம் என்று சொல்லியவர்களை தனக்குச் சமமாக உயர்த்தி அமர வைத்து அழகுபார்ப்பது அவன் குணமாயிற்றே?!

பெரியவாச்சான்பிள்ளை இதன் உட்கருத்தாக சாம்யாபத்தி மோட்சத்தைக் கூறுகிறார். பகவானிடம் ஒருவன் சரணம் என்று சொல்லி, அவன் மோக்ஷம் அடையும் போது, பகவானுடைய எட்டு கல்யாண குணங்களை அடைந்து சாம்யாபத்தி மோக்ஷம் அடைகிறான். அந்த எட்டு கல்யாண குணங்கள் எவை என்றால்...

[அபகதபாப்மா விஜரஹா விமுர்த்திஹு விசோகஹா விஜகிக்ஸஹா அபிபாஸஹா சத்யகாமஹா சத்யசங்கல்பஹா]

அபகதபாப்மா - பாபம் தீண்டாத தன்மை; விஜரஹா - மூப்பு கிடையாது; விமுர்த்திஹு - மரணம் கிடையாது; விசோகஹா - சோகமே கிடையாது; விஜகிக்ஸஹா - பசி கிடையாது; அபிபாஸஹா - தாகம் கிடையாது; சத்யகாமஹா - ஆசைப்படக்கூடிய குணங்கள் படைத்தவர்; சத்யசங்கல்பஹா - எடுத்த செயல் அத்தனையும் முடிக்கிற தன்மை.

இப்படி எட்டு கல்யாண குணங்களை பகவானைச் சரணடைந்தவன் பெறுகிறான் என்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.


556:

வாரண மாயிரம் சூழவ லம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்!

கல்யாண குணங்கள் நிறைந்த ஸ்ரீமந்நாராயணன், ஆயிரம் யானைகள் புடைசூழ, ஊர்வலமாக வருவதால், எதிரே பொன் மயமான பூரண கும்பங்கள் வைத்து, நகர் முழுவதும் தோரணங்கள் நாட்டியிருப்பதாக நான் கனவு கண்டேன் தோழியே!

557:

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,

கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்

காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2


நாளைக்குத் திருமண முகூர்த்தம் என்று நிச்சயித்து, கமுகம் பாளை முதலியவைகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட பந்தலில், சிங்கம் போன்ற நடையுடன், திருமகள் கேள்வனாகிய கோவிந்தன் என்னும் ஓர் காளை புகுவதை நான் கனவினில் கண்டேன் தோழி!

558:

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,

வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,

மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,

அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3

இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் கூட்டம் இங்கே வந்து, என்னை திருமணப் பெண்ணாக நிச்சயம் பேச, பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் கலந்து பேசி, பின் தனித் தனியே சென்று பேசி முடிவு செய்து, வேத மந்திரங்கள் ஓதித் தூய்மையாக்கிய கூறைப் புடவையைக் கொடுத்து என்னை உடுத்தச் செய்து, துர்க்கையான நாத்தனார் மணம் மிகுந்த மாலையை எனக்குச் சூட்டுவதாக கனவு கண்டேன் தோழி!

559:

நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,

பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,

காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4

வைதிகச் சடங்குகளில் வல்ல நல்ல அந்தணர்கள் பலரும் நான்கு திசைகளில் இருந்து புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு வந்து தெளித்து, உயர்ந்த குரலில் மணமக்களுக்கு மங்களாசாசனம் செய்ய, பூக்களைச் சூடிய புனிதனான அந்தக் கண்ணனுடன் என்னைச் சேர்த்து வைத்து, கங்கணக் காப்பு கட்டுவதாக கனவு கண்டேன் தோழி நன்.

560:

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,

சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,

மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5

பருவத்தாலும் வடிவத்தாலும் அழகு மிகுந்த இளம்பெண்கள், சூரிய ஒளி போன்ற மங்கள விளக்கையும் பொற்கலசங்களையும் தங்கள் கைகளில் தாங்கியவர்களாக எதிர் கொண்டு அழைக்க, மதுரை மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்தவராக பூமி அதிர கம்பீரமாக நடந்து வந்து, உள்ளே புகுவதைக் கனவினில் கண்டேன் தோழி!

561:

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,

முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6

மத்தள மேளங்கள் கொட்ட, வரியுடைய சங்குகளை ஊத, மைத்துனன் முறையுள்ள நம்பியான அந்த மதுசூதனன், முத்து மாலைகள் கட்டித் தொங்க விடப்பட்ட அழகிய பந்தலின் கீழே வந்து நின்று, என் கைத் தலத்தைப் பற்றி அருள்வதாகக் கனவு கண்டேன் தோழி!

562:

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,

பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,

காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,

தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7

வேத உச்சரிப்பில் வல்லவர்களான வேதியர்கள் சிறந்த வேதத் தொடர்களை ஓத, அந்தந்தச் சடங்குகளுக்கு உரிய மந்திரங்களாலே, பசுமையான தர்ப்பைகளையும், ஸமித்துகளையும் பரத்தி வைத்து வேள்வி செய்து, சினம் கொண்ட மத யானை போன்ற கண்ணன் என் கையைப் பிடித்துக் கொண்டு அக்னியை வலம் வருவதை, கனவினில் கண்டேன் தோழி!

563:


இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,

நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,

செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,

அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8

இந்தப் பிறவிக்கும், மேல் வரும் எல்லாப் பிறவிகளுக்கும் அடைக்கலமான பற்றுக்கோடாக, நமக்கு நாயகத் தலைவனாக உள்ள நம்பியான நாராயணன், தன் செவ்விய திருக்கையால் எனது கால்களைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்து வைப்பதைக் கனவினில் கண்டேன் தோழி!
564:

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு

எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,

அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,

பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9

வில்லினை ஒத்த புருவமும், ஒளி பொருந்திய முகமும் கொண்ட என் தமையன்மார்கள் வந்து, ஹோம குண்டத்தில் நெருப்பை இட்டு வளர்த்து, என்னை அதன் முன்னே நிறுத்தி, அச்சுதனான அந்தக் கண்ணன் கைமேல் என் கையை வைத்து, பொரிகளை அள்ளி அக்னியில் சேர்ப்பதைக் கனவினில் கண்டேன் தோழி!

565:

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,

மங்கல வீதி வலம்செய்து மணநீர்,

அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,

மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10

ஹோமப் புகையின் முன்னே நெடுநேரம் நின்றிருந்ததால் ஏற்பட்ட வெப்பத்தைத் தணித்து குளிரூட்டும் வகையில் குளிர்ந்த குங்குமக் குழம்பை உடலில் பூசி, சந்தனத்தை நிறையத் தடவி விட்டனர். பின் அங்கிருந்த ஒரு யானையின் மீது நான் கண்ணனுடன் கூடி அமர, அலங்காரம் மிகுந்த தெருக்களிலே திருமண ஊர்வலம் வந்து, நிறைவாக வாசனை நீரில் மஞ்சன நீராட்டுவதைக் கனவினில் கண்டேன் தோழி!

566:

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,

வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,

தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,

வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11


வேயர் குலத்தில் புகழ் மிக்க திருவில்லிபுத்தூர் தலைவரான பெரியாழ்வாரின் மகள் கோதை, தான் கண்ணனைத் திருமணம் செய்து கொண்டதாகக் கண்ட கனவை, தூய தமிழ் மாலையாக அருளினாள். இந்தப் பத்துப் பாசுரங்களையும் பயில வல்லவர்கள், நல்ல குணங்களுடைய குழந்தைகளைப் பெறுவர். கன்னியர் கண்ணனைப் போன்ற கணவனைப் பெற்று மகிழ்வர்.